states

பாஜகவின் கனவை கலைத்த தெலுங்குதேசம்

வரவிருக்கும் 2024 மக்களவைத்  தேர்தலுடன் ஆந்திர மாநிலத்  திற்கும் சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. மக்களவை மற்றும் சட்ட மன்றம் ஆகிய இரண்டு தேர்தல்களையும் ஆந்திர மாநிலம் சந்திக்க உள்ளதால்  ஆதாய நோக்கத்துடன் பாஜக, தெலுங்கு  தேசம் - ஜனசேனா ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி அமைத்து களமிறங்க திட்ட மிட்டது. இதன் தொடக்கமாக சமீபத்தில்  நிறைவுபெற்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் - ஜன சேனா கட்சிகளை கூட்டணிக்கு அழைத்  தது. ஊழல் கைது விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் தெலுங்கானா சட்ட மன்ற தேர்தலில் போட்டியில்லை என  அறிவித்தது. பாஜக அழைப்பை ஏற்று கூட்டணி அமைத்த நடிகர் பவன் கல்யா ணின் ஜனசேனா கட்சி தான் போட்டி யிட்ட அனைத்து இடங்களிலும் “டெபா சிட்” இழந்தது. பாஜகவால் தெலுங்கானா வில் ஜனசேனாவுக்கு ஏற்பட்ட பலத்த அடி  மற்றும் ஆந்திர ஜெகன் மோகன் அரசின்  ஊழல் புகார் கைது நடவடிக்கைக்கு தில்லி சென்று மன்றாடியும் பாஜக உதவி  செய்யாமல் இருந்தது என இரண்டு விஷ யங்களை காரணமாக கையிலெடுத்து ஆந்திராவில் காலடி வைக்கும் பாஜக வின் ஆதாய கனவை தெலுங்கு தேசம்  தவிடுபொடியாக்கியுள்ளது. அதாவது தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கி ரஸ் - தெலுங்கு தேசம் - ஜனசேனா ஆகிய  கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தக வல் தெரிவித்துள்ளன.